நான் நானாக இருத்தல் பலம்.
நான் உருவார்க்கபட்டவன், உதித்தவன் அல்ல!
மரபு அணுக்களும், சூழல் கிரகிச்ச சுவாசமும், அடிப்படை சித்தமும்,
நானாகிய நான் இன்று.
என் நிசம் மாற்ற விருப்பம் இல்லை!
அது நிழல் அல்ல,
இருளுக்கும், ஒளிக்கும் நிறம் மாற !
சத்திரியன் கோபம், அழிக்கும்! அவனையும் சேர்த்து !
உன்மத்தம், உணர்ச்சிகளின் முகவரி அவன்!
சாணக்கியன் கோபம், வஞ்சிக்கும்!
நந்தகுமாரர்களை மட்டும் அல்ல, சந்திர புத்திரர்களையும் !
முடியப்படாத சிரசை விட, கைகெட்டும் அருவாளோடு
வாழ்வை கடந்து செல்வதில் வருத்தம் ஏதும் இல்லை!
No comments:
Post a Comment