Sunday, November 24, 2013

புகைப்படம்

புகைப்படம்

நன்றி நண்பா !
பதினைந்து வருட நினைவுகளால் அமிழ்ந்து  போனது நேற்றைய இரவு !

எத்தனையோ நிகழ்வுகள்! வெற்றி, தோல்வி, நட்பு, காதல், பாசம், பயம், காமம், துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மரணம், மௌனம்!
பெற்றவையும் இழந்தைவையும் ஆழி காற்றாய் அறைந்து சென்றது !

நிழற்படத்தில் ராஜா மட்டும் உயிர்ப்பாய் இருக்கிறான். மரணத்தின் புறவாசலில் நான் அவனை சந்திக்ககூடும்!

பதினைந்து வருட பின்னாளில், இன்னும் ஒரு நிழற்படத்தில்
மற்றுமொரு  இரவு கரைந்து போகலாம்!

நினைவுகள் தான் உயிரோ?