மறுபடியும் மறுபடியும் !
அனைவருக்கும் அடுத்தவன் படுக்கையறை பற்றிய
பரிதவிப்பு!
பருவம் கடந்த பின்
கலவி பல பேருக்கு கடமை,
சிலருக்கு அது தவிர்க்க இயலா தாகம்!
அவர் அவர் கலவி அவர்கள் சொந்தம்,
மூடிய சாளரம் வழி
காமம் மேயும் விழிகளுக்கு
யாரும் பொறுப்பாளி யல்ல!
மனதால் ராமனும், கிருஷ்ணன் தான்!
சூழல் அமைந்தால்,
இருளுக்குள் ஒளிந்து கொள்ள,
கோவலன்கள் என்றும் உண்டு !
அடுத்தவன் கழிப்பறையின் நரகல் மட்டுமல்ல,
உங்கள் கொல்லைபுரமும்
கழுவப்படாமல் இருக்கலாம் !
முதலில் அதை கவனியுங்கள் !
No comments:
Post a Comment