Wednesday, October 26, 2011

புரியாத மௌனம்::!


என் நண்பனின் வேதனை என் வார்த்தையில் :::

கண்ணீரின் கரையோரம் தத்தளித்த வினாடிகளில்
தோணியாய் நீ வந்தாய் !

பதின்மவயது முதல் அழுத முன்பகல் இருளும்
வெளிச்சமாயிற்று வார்த்தைகளில் !
அழிந்த நிஜங்கள் அழியாத வலிகள்
நிர்வாணமான என் முகம்
யாருக்கும் தெரியா என் யாவும் பகிர்ந்தேன் !

அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?
அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?