Saturday, July 4, 2009

என் கல்வெட்டு!

அரசனுமில்லை
அவதார புருசனுமில்லை!

விட்டு
செல்ல
அரசாணி மண்டபகங்களோ
அகல்லிகையோ
இல்லை!

வலையின் வீதிகளில்
சில பதிவுகளை தவிர!

- சின்ராசு

ஆசான்

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம்
வாடித் துன்பமிக உழன்று -
பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -
நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல
வேடிக்கை மனிதரைப் போலே -
நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் -
இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து -
மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -
என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

- மகாகவி பாரதியார்