Thursday, September 20, 2012

பட்டாசு !

பட்டாசு !

கண் அவிந்து அம்மா
வாழை இலையில் அப்பா
மார்  எரிந்து அக்கா
பாதி வேக்காட்டில் நான் !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !

வெடித்து சிதறியதில்
உயிர்கள்
கொளுத்தும் திரிகளில்
தீச்சட்டிகள்
பறக்கும் காகிதங்களில்
பாடைகள்
காது  வலிக்கும் சத்தத்தில்
சண்டி செகண்டி !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !


சின்ராசு
20-09-2012

 

No comments: