Thursday, June 11, 2009

என் மகனாகிய என் தந்தை!

உன் வண்ணம் செறிந்த
கனவுகளுக்கு
தூரிகை நான்!

உன் எண்ணங்களின்
தேவதைகளுக்கு
சிறகு நான்!

உன் மவுனங்களின்
ராஜியர்த்துக்கு
இசை நான்!

உன் சூரிய
புயலின்
கலங்கரை விளக்கம் நான்!

உன் அழகான
ஆன்மாவின்
அரிதாரம் நான்!

உன் பறந்து விரியும்
வாழ்வியலின்
தோனி நான்!

உன் தாயுமான
கருப்பையின்
மகனும் நானே!

- சின்ராசு