அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !
காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !
உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !
நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?
நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?